பாடசாலை மைதானத்தில் இருந்த கொங்கிரீட் வளையம் ஒன்று விழுந்ததில் பாடசாலை மாணவன் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.
மஸ்கெலிய காட்மோர் தோட்ட பாடசாலையில் 6 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் எஸ். அனிஷான் என்ற 11 வயது மாணவனே இந்த அசம்பாவிதத்தில் உயிரிழந்துள்ளார்.
பாடசாலை மைதானத்தில் இருந்த கொங்கிரீட் வளையம் மாணவனின் உடல் மீது உருண்டு வந்து விழுந்ததில் மாணவன் கழிவறை சுவரில் சிக்கி பலத்த காயம் அடைந்தார்.
பின்னர் பாடசாலையின் ஆசிரியர்களும் அயலவர்களும் ஒன்றிணைந்து காயமடைந்த மாணவனை அம்புலன்ஸ் மூலம் மஸ்கெலிய பிராந்திய வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்துள்ளார்.
தேயிலை தோட்ட அபிவிருத்தி நோக்கத்திற்காக குறித்த கொங்கிரீட் வளையம் கொண்டுவரப்பட்டதாக தெரியவந்துள்ளது.
No comments