இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 15 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில் குடிவரவு திணைக்களத்தின் விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும், அவர்களுக்கு எதிரான நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் அவர்கள் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
No comments