தமிழ் மக்களுக்கான அரசியல் உள்ளிட்ட தீர்வுகள் கிடைப்பது சாத்தியப்படுமா என்பதை விட அதனை சாத்தியப்படுத்த வேண்டியவர்களாக இருப்பதே முக்கியமானது. அதை சாத்தியப்படுத்துபவராக எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இருப்பார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் நாட்டை வழிநடத்தக்கூடிய சிறந்த தலைமைத்துவம் தேவைப்படுகின்றது.
சஜித் பிரேமதாச வடக்க கிழக்கில் 1000 விகாரைகளை கொண்டுவருவென் என பகிரங்கமாக கூறியிருந்தவர்.
அதேபோன்று குறைந்த பட்சம் வடகிழக்கு இணைந்த ஒரு அலகாக இருப்பதை கூட விரும்பாத அல்லது இருக்கக் கூடாது என நீதிமன்று சென்று வடக்கையும் கிழக்கையும் பிரித்தவர்கள் ஜே.வி.பியினர்.
இந்நிலையில் அதற்கு வேறுபட்ட அரசியல் நகர்வை கொண்ட தலைவராக ரணில் விக்கரமசிங்க இருக்கின்றார். இது அனைத்து கட்சியினருக்கும் நன்கு தெரிந்த விடயம்.
அதேவேளை தேர்தாலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படும் வேட்பாளர்களுக்குள் ரணிலே சிறந்த தெரிவாகவும் உள்ளார்.
இதேநேரம் எமது கட்சி மக்கள் நலன்கள் எதிர்காலம் மற்றும் நாட்டின் நலன்களிலிருந்து சிந்தித்தே தீர்மானங்களை எடுத்துவருகின்றது.
அந்தவகையில் தற்போதுள்ள அரசியல் சூழலில் ரணிலின் தெரிவே சாத்தியமானதென்று நாம் ஏற்கனவே வெளிப்படையாக தெரிவித்து வருகின்றோம் என மேலும் தெரிவித்தார்.
No comments