Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில் உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக தகனம் செய்ய அறிவுறுத்தல்


யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக சடலத்தை தகனம் செய்யும்மாறு உறவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பின்ராஸ் நாட்டில் வசித்து வந்த 62 வயதான மூதாட்டிக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டமையால்,  ஆயுள்வேத சிகிச்சை முறையில் அதனை குணமாக்க முடியும் என்ற நம்பிக்கையில் இலங்கை திரும்பி  அராலி பகுதியில் தங்கி இருந்து ஆயுள்வேத சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

அந்நிலையில் திடீரென காய்ச்சல் ஏற்பட்டமையால் , யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் 

அசாதாரண காய்ச்சல் காணப்பட்டமையால் , மூதாட்டிக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதனை அடுத்து கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக சடலத்தை தகனம் செய்யவேண்டும் என உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் , கொரோனா சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

No comments