Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஆரம்பம்


2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்றைய தினம் திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளது. 

எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த பரீட்சையில் 4 இலட்சத்து 52 ஆயிரத்து 979 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில் 3இலட்சத்து 87 ஆயிரத்து 648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65 ஆயிரத்து 331 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளடங்குகின்றனர்.

நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 3ஆயிரத்து 527 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சை இடம்பெறவுள்ளது.

இதேவேளை, பரீட்சைக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து விளக்கமளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நிஹால் தல்துவ, துப்பாக்கி ஏந்திய அதிகாரிகள் குழுவொன்று இதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் 2ஆயிரம்பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பிற்காக செயற்படவுள்ளதாகவும், தேவையான அறிவுறுத்தல்கள் பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments