Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில். மாணவி ஒருவர் குழந்தையை பிரசவித்த பின்னர் , குழந்தையை கைவிட்டு தலைமறைவு


யாழ்ப்பாணத்தை சேர்ந்த பாடசாலைச் சிறுமி ஒருவர், யாழ்.போதனா வைத்தியசாலையில்  குழந்தையை பிரசவித்த பின்னர் , வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றுள்ளார். 

வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி கர்ப்பம் தரித்த நிலையில் தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்நிலையில் மாணவி நேற்றைய தினம் இரவு குழந்தையை பிரசவித்த நிலையில், குழந்தையை வைத்தியசாலையில்  விட்டுவிட்டு, குழந்தையின் தாயான பாடசாலை மாணவியும் , மாணவியின் தாயாரும் இன்றைய தினம் சனிக்கிழமை காலை தலைமறைவாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments