Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகத்திற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு


தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகத்திற்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூன் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த பங்குனி மாதம் 16ம் திகதி இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்சபை கூட்டம் சட்டரீதியற்றது என தெரிவித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்தியகுழு உறுப்பினர்களான சுதாகரன் மற்றும் சூ.சூரியபிரபாவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த வழக்கானது வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த போது, குறித்த வழக்கின் எதிராளிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையில் குறித்த வழக்கமானது ஜீன் மாதம் 19ம் திகதிக்கு திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.

கடந்த பங்குனி மாதம் 16ம் திகதி ஈரப்பெரியகுளம் பொதுநோக்கு மண்டபத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் சபை கூட்டம் இடம்பெற்றிருந்தது.

குறித்த பொதுச் சபை கூட்டதிலே பல தீர்மானங்களும் சில பதவி நியமனங்களும் இடம்பெற்றிருந்தன. ஆனால் அவ்வாறு இடம்பெற்ற கூட்டமானது கட்சியின் யாப்பு விதிகளை மீறியதாக காணப்பட்டதாலும் தேர்தல் ஆணைக் குழுவின் விதிகளுக்கு எதிராக காணப்பட்டதாலும் குறித்த பொதுச்சபை கூட்டமானது ஒரு சட்ட ரீதியான கூட்டமில்லை என்பதுடன், அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் தீர்மானங்கள், நியமனங்கள் சட்ட ரீதியற்றது என்ற ரீதியில் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments