ஈரானிய தூதுவர் ஏ.டெல்கோஷை தாக்கி விபத்திற்குள்ளாக்கிய கொழும்பு 07ஐ சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு 02, முத்தையா வீதி பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றின் வாகன நிறுத்துமிடத்திற்குள் தூதுவர் பிரவேசித்த போது, வர்த்தகருடன் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது குறித்த நபர் தூதுவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.
இதன்போது தூதுவர் தனது காரில் இருந்து இறங்கி தப்பிச் செல்ல முற்பட்ட காரின் முன்பகுதியில் கையை வைத்து பொலிஸ் அதிகாரிகள் வரும் வரை காத்திருக்குமாறு சாரதிக்கு அறிவித்துள்ள நிலையில், சாரதி திடீரென காரை இயக்கி முன்னோக்கி சென்று, அந்த காரின் முன்பகுதியில் விழுந்துள்ள நிலையில், சந்தேகநபரான சாரதி, தூதுவருடன் காரை சுமார் 15 மீற்றர் தூரம் செலுத்தி பின்னர் நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கொழும்பு 07ல் வசிக்கும் 33 வயதுடைய வர்த்தகரை செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை, கொழும்பு புதுக்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், நாளை வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
No comments