Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பி சென்றவர் கிளிநொச்சியில் போதைப்பொருளுடன் கைது


யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற சந்தேகநபர் போதைப்பொருளுடன் கிளிநொச்சி பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை கைது  செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.தப்பி சென்ற சந்தேகநபர் கிளிநொச்சி அக்கராயன் காட்டுப்பகுதியில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருப்பதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த பகுதிக்கு விரைந்த பொலிசார் இளைஞனை கைது செய்துள்ளனர்.

 இளைஞனை கைது செய்த போது, 3 ஆயிரத்து 800 கிராம் ஜஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளை, கடந்த மே மாதம் 12ம் திகதி பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச் சென்றிருந்தார். 

சந்தேக நபர் தப்பி சென்றமை தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது 

No comments