சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் பதினாறாவது ஆண்டு குருபூசை நிகழ்வு நாளை மறுதினம் புதன்கிழமை காலை 9.00 மணிக்கு தெல்லிப்பழை துர்க்காதேவிதேவஸ்தானத்தில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்விற்கு யாழ் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீட இந்து நாகரீகதுறை பேராசிரியர் முகுந்தன் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.
இதேவேளை இந் நிகழ்வில் அளவெட்டி கும்பிளாவளை பிள்ளையார் ஆலய குருக்கள் சிவஸ்ரீ இராமசூரிய பிரபாகரக் குருக்கள் மற்றும் மாதகல் சாந்தநாயகி சமேத சந்திர மௌலீஸ்வரர் ஆலய குருக்கள் சிவஸ்ரீ இரத்தின ஐயர் மாணிக்கவாசகக் குருக்கள் ஆகியோருக்கு மூத்த சிவாச்சாரியார்களுக்கான விருது வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளது.
No comments