ஐஸ் போதைப்பொருளை நீண்ட காலமாக பயன்படுத்தியமை மற்றும் விநியோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சாரதி மற்றும் நடத்துநரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு தாளவட்டுவான் சந்தி அருகில் நேற்றைய தினம் இரவு சந்தேகத்திற்கிடமாக இருவர் நடமாடுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய அங்கு சென்ற பொலிஸார் குறித்த இருவரையும் சோதனை மேற்கொண்டனர்.
இதன் போது தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துநர்கள் என அடையாளம் காணப்பட்ட இவ்விரு சந்தேக நபர்கள் வசம் இருந்து 3,300 மில்லிகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
அதனை அடுத்து இருவரையும் பொலிஸார் கைது விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
No comments