புவக்பிட்டிய, கெகில்ல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
அப்பகுதியை சேர்ந்த 36 வயதான பெண்ணொருவர், அவரது 7 வயது மகள் மற்றும் பெண்ணின் தந்தையான 78 வயதான முதியவர் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களின் வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments