Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதியின் விசேட உத்தரவு!


அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற நலத்திட்டங்களை வினைத்திறனுள்ளதாக்கி அதன் பலன்களை மக்களுக்கு வழங்குவதற்கு மாகாண ஆளுநர்கள், முழு மூச்சுடன் செயற்படவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாகாண ஆளுநர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண மட்டத்தில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை விரைவாக தீர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இலவச காணி உரிமைத் திட்டத்தின் வினைத்திறன் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலவச காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்கு கிராம உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக வேறொரு குழுவிற்கு அதிகாரத்தை வழங்குவதன் மூலம் நடமாடும் சேவைகளை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் மக்களை ஆர்வமடையச் செய்து அவர்களுக்கு அந்த நன்மையை வழங்க வேண்டிய பொறுப்பு பிரதேச செயலாளர்களின் பொறுப்பையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது நினைவுபடுத்தினார்.

இதேவேளை மாகாண மட்ட ஆசிரியர் பற்றாக்குறையை விரைவில் தீர்க்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் தேசிய பாடசாலைகளுக்கு மேலும் 2500 புதிய ஆசிரியர் நியமனங்களை ஜூலை மாதம் 3ஆம் திகதி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சர் குறிப்பிட்டார்.

No comments