Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்கள் மீது படகினை ஆபத்தான முறையில் செலுத்தி மரணத்தை ஏற்படுத்திய உள்ளிட்ட குற்றச்சாட்டு


நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மீது , ஆபத்தான முறையில் படகினை செலுத்தி , கடற்படை மாலுமிக்கு மரணத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு , மன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து  அவர்களை எதிர்வரும் 08ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது 

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய படகொன்றினை வழிமறித்து , படகில் இருந்தவர்களை கடற்படையினர் கைது செய்ய முற்பட்ட வேளை கடற்படை மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும், கடற்படை சிறப்பு மாலுமியான குருநாகல் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ரத்நாயக்க என்பவரே உயிரிழந்திருந்தார். 

அதனை அடுத்து மீன் பிடி படகில் இருந்த 10 மீனவர்களையும் கைது செய்த கடற்படையினர் , அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றதுடன்  உயிரிழந்த மாலுமியின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைந்தனர். 

உடற்கூற்று பரிசோதனையில் , மாலுமியின் நெஞ்சு பகுதியில் பலமாக தாக்கப்பட்டமையையால்  மரணம் சம்பவத்துள்ளது என அறிக்கையிடப்பட்டுள்ளது. அதேவேளை சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை காங்கேசன்துறை பொலிசாரிடம் கடற்படையினர் ஒப்படைத்ததை அடுத்து, அவர்களை யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி முன் முற்படுத்திய பொலிஸார்  சட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய அறிக்கையுடன் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தினர். 

படகினை ஆபத்தான முறையில் செலுத்தி கடற்படை மாலுமிக்கு மரணத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் மன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து , 10 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. 

No comments