Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். காசோலை மோசடியில் ஈடுபட்ட குற்றத்தில் வவுனியாவை சேர்ந்த இருவர் கைது


யாழ்ப்பாணத்தில் நிறப்பூச்சுகள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றிடம் பொருட்களை கொள்வனவு செய்த பின்னர் காசோலையை கொடுத்து ஏமாற்றிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வவுனியாவை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். 

நிறுவனத்திடம் 11 இலட்சம் பெறுமதியான பொருள்களைக் கொள்வனவு செய்த பின்னர் காசோலையை வழங்கியுள்ளனர்.

குறித்த காசோலையை வங்கியில் வைப்பு செய்யப்பட்ட போது , கணக்கில் பணம் இல்லை என காசோலை திரும்பியுள்ளது. 

அதனை அடுத்து நிறுவனத்தினர் , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments