Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொழும்பில் 67ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து மாணவர்கள் இருவர் உயிரிழப்பு!


கொழும்பு- கொம்பனித்தெருவில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து 15 வயது மாணவனும் மாணவியும் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசத்தில் வசிக்கும் மாணவனும், மாணவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகப்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவனும் மாணவியும் கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் ஒரே வகுப்பில் கல்வி பயின்று வந்துள்ளனர் எனவும், இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைக் கொம்பனித்தெரு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments