Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஜீவன் தொண்டமானை கைது செய்ய உத்தரவு


இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர் போக்குவரத்து அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உட்பட பல சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நுவரெலியா பதில் நீதவான் ஜயமினி அம்பகஹவத்த நுவரெலியா பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 30 ஆம் திகதி  நுவரெலியா பீட்ரூ தோட்ட தேயிலை தொழிற்சாலைக்குள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் இன்று (22) நீதிமன்றத்தில் விளக்கங்களை முன்வைத்தனர்.

அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட சந்தேக நபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நுவரெலியா பொலிஸார் எழுத்து மூலம் அறிவித்திருந்த போதிலும், சந்தேகநபர்கள் எவரும் நீதிமன்றில் ஆஜராகாததால் தோட்ட நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் பல விளக்கங்களை முன்வைத்தனர்.

இதன் அடிப்படையில் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments