Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இருவர் படுகாயம்


ஹபராதுவ - ஹருமல்கொட பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், நபர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர், முச்சக்கரவண்டியில் ஏற முற்பட்ட போது, ​​துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் முச்சக்கரவண்டி மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதன்போது முச்சக்கர வண்டியின் சாரதியும் காயமடைந்துள்ளார்.

அதனை அடுத்து துப்பாக்கி சூடு நடத்திய இருவரும் , சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றனர். 

துப்பாக்கிச் சூட்டில் 34 மற்றும் 54 வயதுடைய இருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் ஹபராதுவ மற்றும் அகுலுகஹா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments