Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஹோட்டலில் கசிப்பு விற்பனை - இருவர் கைது


கண்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தேநீர் மற்றும் குளிர்பானம் விற்பனை செய்கின்ற போர்வையில், கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர் ஒருவர் கைதாகியுள்ளனர்.

கண்டி மத்திய சந்தையில் உள்ள ஹோட்டலிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது 8 கசிப்பு போத்தல்களுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகம் ஏற்படாத வகையில் குளிர்ப்பான போத்தல்களில் கசிப்பு  பொதி செய்து வைத்துள்ளதாகவும், பணம் செலுத்திய பின்னர் , ஊழியர்களால் டீ கப்பில் கசிப்பு ஊற்றி கொடுப்பதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சில காலமாக இடம்பெற்று வரும் இந்த வியாபாரத்தில், சந்தையில் வேலை செய்யும் கூலி வேலை செய்வோர் , கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் ஆகியோர் தினசரி வாடிக்கையாளர்கள் எனவும் கூறப்படுகின்றது.

அதிகாலை 5.00 மணி முதல் கசிப்பு வியாபாரம் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments