Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொழும்பில் துப்பாக்கி சூடு - இருவர் உயிரிழப்பு ; ஐவர் படுகாயம்


அதுருகிரிய, பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த எனப்படும் கிளப் வசந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளார்.

அதேநேரம் பிரபல பாடகி சுஜீவா உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

அதேவேளை துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய கார் கடுவெல, பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது

அதுருகிரிய நகரில் மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அழகுகலை நிலைய திறப்பு விழாவின் போது குறித்த  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல வர்த்தகரான 55 வயதான சுரேந்திர வசந்த பெரேரா என்ற ‘கிளப் வசந்த’ மற்றும் 38 வயதுடைய நபரும் மற்றுமொருவரும் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் கொழும்பு 7 மற்றும் அதுருகிரிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை  குறித்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களில் பிரபல பாடகியான கே. சுஜீவாவும் இருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இது குறித்த தீவிர விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments