Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தபால் வாக்களிப்புக்கு 712,321 பேருக்கு வாய்ப்பு


தபால் மூல வாக்களிப்பு செப்டம்பர் 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நடைபெறும் நிலையில், 7 இலட்சத்திற்கும் அதிக வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக 736,589 வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதில், 24,268 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் 26ஆம் திகதி தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச் சீட்டுக்கள் குறித்த நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments