சீகிரியா சிங்கபாதம் அருகில் சுற்றுலாப் பயணிகள் குழு மீது குளவி கொட்டியதைத் தொடர்ந்து சீகிரியாவை தற்காலிகமாக மூடுவதற்கு மத்திய கலாசார நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குளவி தாக்கியதில் 26 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் 13 உள்ளூர் சுற்றுலாப் பயணிகளும் சீகிரிய கிராமிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நாட்களில் அதிக வெயில் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதுதான் குளவிகள் கலைவதற்கு காரணம் என சுற்றுலா வழிகாட்டிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
No comments