மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு லிங்காஸ்வர கீதம் வழங்கிய "பன்முக நோக்கில் பாரதி" எனும் விசேட நிகழ்வு நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது
வடமராட்சி வல்லையில் உள்ள விக்னேஸ்வரா திருமண மண்டபத்தில் லிங்காஸ்வர கீத இயக்குநர் ஷாஜிதா அட்ஜெயலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜாவும் சிறப்பு அதிதிகளாக வர்த்தகர் சண்முகசுந்தரம் பிறேம்குமாரும் பாடலாசிரியர் வெற்றி துஷ்யந்தனும் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகளை இசை, நடனம் ,இலக்கியம் என்னும் பல்கோண பார்வையில் வெளிப்படுத்தும் வகையிலான பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன
No comments