சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் பொறுப்புணர்வுடன் தகவல்களை பகிர வேண்டும் என வடமாகாண முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கு மாகாணத்தின்ஆளுநர் பதவியில் இருந்து நேற்றைய தினம் திங்கட்கிழமை பி.எஸ்.எம். சார்ள்ஸ் இராஜினாமா செய்தார்.
இந்நிலையில் சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பல்வேறு வதந்திகள் பகிரப்படுகின்றன. அந்த தகவல்களுக்கு பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் நிழற்படத்தை முன்னிலைப்படுத்தி, அவரது இராஜினாமா செய்தி பதிவிடப்பட்டுள்ளது.
குறித்த செய்தியில் முன்னாள் ஆளுநர் ஒருவர் வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்து, விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பியதாக கூறப்படும் விடயம் தொடர்பில், சம்பந்தப்பட்டவர்களின் தகவல்கள் தெளிவாகவும், உண்மையானதாகவும் பகிரப்பட வேண்டும்.
சமூக ஊடகங்களிலும், இணைய தளங்களிலும் தகவல்களை பகிரும் போது, செய்திக்கு பொருத்தமான நிழற்படங்களை பகிரவும். தேவையற்ற வதந்திகளை பகிராது இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்பதே அனைவரினதும் அவா என அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments