Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். தனிமையில் வசித்த முதியவர் சடலமாக மீட்பு


யாழ்ப்பாணத்தில் தன்மையில் வசித்து வந்த முதியவர் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் 

திருநெல்வேலி கேணியடி பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி சிறிராகுலன் (வயது 79)  என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

நல்லூர் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் , பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் நேற்றைய தினம் சனிக்கிழமை டெங்கு ஒழிப்பு கள தரிசிப்புகளை மேற்கொண்டனர். 

அதன் போது குறித்த முதியவரின் வீட்டுக்கு சென்ற போது , வீட்டினுள் துவிச்சக்கர வண்டி மீது விழுந்த நிலையில், சடலமாக  காணப்பட்டுள்ளார். 

அது தொடர்பில் அவர்கள் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு , யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.  

உடற்கூற்று பரிசோதனையின் போது மாரடைப்பு காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 



No comments