ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் யாழ்ப்பாணம் உடுப்பிட்டி தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.
ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் ஞானப்பிரகாசம் சுலக்சன் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இதன்போது சக வேட்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மூக்கு கண்ணாடி சின்னத்தில் ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணி யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments