மக்களின் தேவைகள் மற்றும் கவலைகளை தீர்த்து சமூக நலனுக்காக தேவைப்படும் தீர்வுகளை வழங்குவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் தென்மராட்சி மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மக்கள் சந்திப்புக்களில் ஈடுபட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.
சாவகச்சேரி தொகுதியின் நாவற்குழி செல்வபுரம், நாவற்குழி கிழக்கு, கோவிலாக்கண்டி வேலம்பிராய், மறவன்புலவு ஆகிய பகுதிகளில் அங்கஜன் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார்.
No comments