Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மட்டக்களப்பு நீதிமன்றுக்கு பலத்த பாதுகாப்பு


மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டு வைத்து தகர்த்தப் போவதாக பொலிசாருக்கு கடிதம் கிடைத்ததை அடுத்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்ற நடவடிக்கைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.

குறித்த நீதின்ற கட்டிடத் தொகுதியை 25 ம் திகதிக்கும் 28 ம் திகதிக்கும்  உட்பட்ட நாட்களில்  வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக கடந்த வியாழக்கிழமை பொலிசாருக்கு கிடைத்த பதிவு தபால் ஒன்றையடுத்து பொலிசார் உடனடியாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை இரவு தொடக்கம் நீதிமன்ற கட்டிட தொகுதி பகுதியை சுற்றி பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை காலை 5 மணி தொடக்கம் விசேட அதிரடிப்படையினர் 8 மணி வரை மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் நடாத்திய பின்னர் நீதிமன்றத்துக்குள் செல்வோரை பலத்த சோதனையின் பின்னர் உள் நுழைய அனுமதித்தனர்.

இதனை தொடர்ந்து இன்று திங்கட்கிழமை (28) விசேட அதிரடிப்படையினர், மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் நீதிமன்ற உத்தியோகத்தர்களின் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் உள் நுழைய தடை விதித்ததுடன் அனைவரையும் பலத்த சோதனையின் பின்னர் உள் நுழைய அனுமதித்தனர்.


No comments