Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தீர்வு என்ன என வெளிப்படையாக கூறாத தேசிய மக்கள் சக்தியிடம் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது


தமிழர்களுக்கு என்ன தீர்வு என வெளிப்படையாக கூறாத தேசிய மக்கள் சக்தியிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர் சந்திரஹாசன் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக விழா நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழில். உள்ள தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது. 

அங்கு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 

தென்பகுதியில் ஒரு மாற்றம் இடம்பெற்றிருக்கிறது. ஊழலுக்கு எதிரான அரசு வேண்டும், எல்லோரும் சமமானவர்கள், எல்லோரும் இலங்கை மக்கள் என்று ஒரு மாற்றத்திற்கான அலை காணப்படுகிறது 

இளைஞர்கள் தற்போது கூறுகிறார்கள் தேசிய மக்கள் சக்தியானது சமத்துவமான ஒரு அரசியலை பேசுகின்றது புதிய ஒரு அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுக்கின்றது என்று. ஆனால் அந்த சமத்துவ அரசியலிலும் கவலையான விடயம் தமிழ் மக்களை இரண்டாம் தரப்பாக பார்க்கின்ற விடயம் காணப்படுகிறது.

அதிலிருந்து அவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. அவர்கள் தமிழருடைய தீர்வு தொடர்பான தெளிவான விடயத்தினை இதுவரையிலும் முன் வைக்கவில்லை. அவர்கள் அதை வெளிப்படையாக கூறுவதற்கு பயப்படுகிறார்கள் என தெரிவித்தார்.


No comments