Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கடந்த 10 மாதங்களில் இலஞ்சம் வாங்கிய 73 பேர் கைது


இலங்கையில் கடந்த 10 மாதங்களில் இலஞ்சம் வாங்கியமை தொடர்பான குற்றச்சாட்டில் 73 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு தலைமை பொலிஸ் ஆய்வாளர், இரண்டு பொலிஸ் ஆய்வாளர்கள், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், எட்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஒன்பது சார்ஜென்ட்கள் உட்பட 21 பொலிஸ் அதிகாரிகள் அடங்குகின்றனர்.

மேலும், 24 பொதுமக்களும், மூன்று கிராம உத்தியோகத்தர்களும், பாடசாலை அதிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இலஞ்சம் வாங்கியதற்காகவும், இலஞ்சம் வழங்கியதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்  என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments