Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். வெள்ளம் தேங்கி நிற்கும் வீதியை சீர் செய்த இளைஞர்கள்


யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் வெள்ள நீர் தேங்கி நிற்கும் வீதியினை அப்பகுதி இளைஞர்கள் தன்னார்வலர்களின் நிதியுதவியுடன் சீர் செய்துள்ளனர். 

வரணி, நாவற்காடு, கரம்பைக்குறிச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள்,மற்றும் விவசாயிகள் அதிகமாகப் பயன்படுத்துகின்ற பிரதான வீதியில் தாழ் நிலப் பகுதிகளில் மழை காலங்களில் அதிகளவான வெள்ளநீர் தேங்கி நிற்பதன் காரணத்தால் குறித்த வீதியினூடாக போக்குவரத்து செய்ய முடியாது அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். 

அந்நிலையில், நாவற்காடு,கரம்பைக்குறிச்சி பகுதி இளைஞர்கள் தமது நிதிப்பங்களிப்புடன் குறித்த வீதியினூடாக மக்கள் சிரமப்படாது செல்லும் வகையில், வெள்ளம் தேங்கி நிற்கும் பகுதிகளில் மண் போட்டு சீர் செய்துள்ளனர்.





No comments