Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வீடுகளை ஒப்படைக்காத முன்னாள் எம்.பிக்கள்


நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் சுமார் 30 பேர் தங்களுடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை மீள ஒப்படைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில முன்னாள் உறுப்பினர்கள் தங்களது உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களில் இருந்து உடமைகளை அகற்றி வருவதாக பாராளுமன்ற வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாசஸ்தலங்களை வழங்க வேண்டியுள்ளதாக தெரிவித்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறித்த வீடுகளை மீள ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த வீடுகளை ஒப்படைக்காவிடின், நீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படும் என பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.

இதேவேளை, மாதிவெல பிரதேசத்தில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் வீடமைப்புத் தொகுதியில் இருந்து வீடுகளை பெற்றுத் தருமாறு சுமார் 35 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடுகள் தேவைப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற நிர்வாகம் முன்னர் அறிவித்தல் விடுத்திருந்தது.

பாராளுமன்ற வளாகத்தில் இருந்து 40 கிலோ மீற்றருக்கும் அதிக தூரத்தில் வீடுகளைக் கொண்டவர்களுக்கு, இதற்கான கோரிக்கைகளை முன்வைக்கலாம்

No comments