கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 248 குடும்பங்களைச் சேர்ந்த 717 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 04 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாரதிபுரம் கிராம சேவையாளர் பிரிவில் 105 குடும்பங்களைச் சேர்ந்த 345 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொண்ட மான்நகர் கிராம சேவையாளர் பிரிவில் 03 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
மாவடியம்மன் கிராம சேவையாளர் பிரிவில் 01 குடும்பத்தைச் சேர்ந்த 04 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
கனகபுரம் கிராம சேவையாளர் பிரிவில் 01 குடும்பத்தைச் சேர்ந்த 03 பாதிக்கப்பட்டுள்ளனர்
கண்ணகிபுரம் கிராம சேவையாளர் பிரிவில் 33 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
இராமநாதபுரம் கிராம சேவையாளர் பிரிவில் 02 குடும்பங்களைச் சேர்ந்த 05 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
திருநகர் கிராம சேவையாளர் பிரிவில் 03 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கனகாம்பிகைக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் 02 குடும்பங்களைச் சேர்ந்த 08 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவையாறு மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் 03 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜெயந்திநகர் கிராம சேவையாளர் பிரிவில் 01 குடும்பத்தைச் சேர்ந்த 04 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் பிரமந்தனாறு கிராம சேவையாளர் பிரிவில் 65 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோக்கன்கட்டு கிராம சேவையாளர் பிரிவில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தர்மபுரம் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில் 05 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உமையாள்புரம் கிராம சேவையாளர் பிரிவில் 08 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடரும் சீரற்ற வானிலை தொடர்பில் மகள்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், இடர் ஏற்படும் சந்தர்ப்பத்தில் கிராம சேவையாளர் ஊடாக முகாமைத்துவப்பிரிவு, பொலிஸார், இராணுவத்தினரின் உதவியை பெறுமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.
No comments