Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் இருந்து சென்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் கம்பளையில் கைது


யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் களவு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கும்பல் ஒன்று கம்பளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த, 19 வயதுக்கும் 26 வயதுக்கும் இடைப்பட்ட நால்வர் அடங்கிய கும்பல் ஒன்று , யாழ்ப்பாணம் , வவுனியா கண்டி , கலஹா நுவரெலியா , கந்தபொல ஆகிய பகுதிகளில் வீடுகள் , ஆலயங்கள் , வியாபார நிலையங்கள் என்பற்றில் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

கம்பளை பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் முன்னெடுத்து வந்த விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. 

கடந்த நான்கு வருட காலமாக நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று , அப்பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

அதேவேளை குறித்த கும்பலுக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் , அதில் 09 வழக்கு விசாரணைகளுக்கு அவர்கள் சமூகமளிக்காத நிலையில் 09 பிடியானைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 


No comments