Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இலஞ்சம் பெற்ற மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கைது!


09 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சலோச்சன கமகே மற்றும் அதற்கு ஆதரவாக செயற்பட்ட வர்த்தகர் ஒருவரையும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

கோட்டை, மாதிவெல பிரதேசத்தில் நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய, புறக்கோட்டை பகுதியிலுள்ள கடையொன்றின் முன்பாக வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டோரிங்டன் அவென்யூ பகுதியில் முறைப்பாட்டாளரின் உறவினர் ஒருவருக்குச் சொந்தமான காணியொன்றை நகர அபிவிருத்தி அதிகார சபை கையகப்படுத்தியதன் பின்னர், அதற்கான இழப்பீட்டுத் தொகையை  உடனடியாக பெற்றுக் கொள்வதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதாகக் கூறி சந்தேகநபர்கள் இலஞ்சம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

No comments