அனுமதியின்றி மணலை கடத்தி சென்ற மூன்று டிப்பர் வாகனங்களை பொலிஸார் வீதியில் துரத்தி சென்று கைப்பற்றியதுடன் , அதன் சாரதிகளையும் சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - மன்னார் நெடுஞ்சாலையில் , பயணித்த மூன்று டிப்பர் வாகனத்தை பொலிஸார் வழிமறித்த போது , பொலிசாரின் கட்டளையை மீறி டிப்பர் வாகனங்கள் பயணித்துள்ளன.
அதனால் பொலிஸார் அவற்றை துரத்தி சென்ற வேளை பின்னால் சென்ற டிப்பர் வாகனம் மணலை வீதியில் கொட்டி , பொலிஸார் தம்மை பின்தொடராத வகையில் வாகனத்தினை செலுத்தியுள்ளனர்.
இருந்த போதிலும் பொலிஸார் அவற்றை துரத்தி சென்று மூன்று வாகனங்களையும் மடக்கி பிடித்து அவற்றை கைப்பற்றியதுடன் , வாகன சாரதிகளையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சாரதிகளும் , டிப்பர் வாகனமும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
No comments