Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 15 இலட்ச ரூபாய் பெறுமதியான பலகைகள் மீட்பு


யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமான முறையில் 15 இலட்ச ரூபாய் பெறுமதியான மர பலகைகளை கடத்தி வந்த இருவர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மல்லாவி பகுதியில் இருந்து டிப்பர் வாகனத்தில் அனுமதியின்றி மர பலகைகளை யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வந்த போது , சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த டிப்பர் வாகனத்தினை வழி மறித்து பலகைகளை மீட்டுள்ளனர். 

அதனை அடுத்து டிப்பர் வாகனத்தினை கைப்பற்றிய பொலிஸார் அதில் பயணித்த இருவரையும் கைது செய்தனர்

கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் , அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 





No comments