Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

4 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது


சுமார் 04 கோடியே 38 இலட்சத்து 80ஆயிரம் ரூபா பெறுமதியான "குஷ்" போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வந்த பயணி ஒருவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கொழும்பில் வசிக்கும் 30 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி என தெரிவிக்கப்படுகிறது.

தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வந்தடைந்துள்ளார்.

அவர் கொண்டு வந்த பயணப் பொதியில் 04 கிலோ 388 கிராம் “குஷ்” என்ற போதைப்பொருள் தொகையை 05 பொதிகளில் மறைத்து வைத்திருந்த நிலையில் குறித்த நபரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் மற்றும் அவர் கொண்டு வந்த "குஷ்" என்ற போதைப்பொருளை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது 

No comments