Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ் . மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்கள் கெளரவிப்பு நிகழ்வு


யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிக் கழகம் நடாத்திய வருடாந்த உத்தியோகத்தர்கள்  கெளரவிப்பு நிகழ்வு கழகத் தலைவர் உ. தர்ஷினி தலைமையில்  நேற்றைய தினம் வியாழக்கிழமை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட செயலரும் நலன்புரி கழகத்தின் போசகருமான மருதலிங்கம் பிரதீபன் கலந்து கொண்டார்.

நிகழ்வில், ஓய்வு பெற்ற மற்றும் இடமாற்றலாகிச் சென்ற உத்தியோகத்தர்கள் தொடர்பாக அனுபவப் பகிர்வினை உத்தியோகத்தர்கள் வழங்கினார்கள்.

இறுதியாக மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்கள் மற்றும் இடமாற்றலாகிச்  சென்ற உத்தியோகத்தர்கள்  கெளரவிக்கப்பட்டார்கள். 

இந்நிகழ்வில் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள். 





No comments