Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அரச அலுவலங்களில் பழிவாங்கப்படும் மக்கள் - உத்தியோகஸ்தர்கள் சிந்தனைகளில் மாற்றம் வேண்டும்


அரச அலுவலர்களிடம் அதுவும் புதிதாக பதவியேற்ற நிர்வாக அலுவலர்கள் சிலரிடம் மக்களை பழிவாங்கும் - அலைக்கழிக்கும் சிந்தனை இருப்பதை நான் அவதானிக்கின்றேன். இந்த எண்ணங்களை மாற்றுங்கள். போரால் பாதிக்கப்பட்ட எங்கள் மக்களை, எங்கள் மாகாணத்தை நாங்கள் எல்லோரும் இணைந்துதான் உயர்த்தவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழாவும் 'வடந்தை' நூல் வெளியீடும் மன்னார் நகர சபை மண்டபத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

அதன் போது, மன்னார் பாலத்திலிருந்து அதிதிகள் கலை ஆற்றுகைகளுடன் பேரணியாக விழா மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டனர். 

அதனைத் தொடர்ந்து பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

தமிழர்களின் மிக முக்கியமான பண்பாடு விருந்தோம்பல். அதை நாம் இன்று மறந்து செல்கின்றோம். அவ்வாறு நாங்கள் மறந்து செல்பவற்றை நினைவூட்டத்தான் இவ்வாறான விழாக்கள் நடத்தப்படுகின்றன.

எமது சுற்றாடலை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பில் சிறுவயதிலிருந்தே பழக்கவேண்டியிருப்பதாகவும் அதற்காக ஒரு பாடவேளையை ஒதுக்குவது தொடர்பில் அமைச்சின் செயலருடன் கலந்துரையாட உள்ளேன்.

 வீதிகளில் குப்பைகளை வீசி எமது மாகாணத்தை அசிங்கமாக்குவதில் அநேகர் படித்தவர்கள்தான்.

மாவட்டச் செயலராக கடந்த காலத்தில் இருந்தபோது கூட இவ்வாறு பொதுமக்கள் சந்திப்பதற்கு வரவில்லை. ஆனால் தற்போது, சின்ன விடயங்களுக்கும்ஆளுநர் அலுவலகத்துக்கு வருகின்றார்கள்.

அந்தப் பொதுமக்கள் தங்களது பிரதேசங்களிலுள்ள அரச திணைக்களங்களில் அந்தச் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை என வருகின்றனர்.

பொதுமக்கள் தினமான திங்கட்கிழமை இரவு 8 மணியைத் தாண்டியும் பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொடுத்திருந்தேன்.

முன்னைய காலத்தில் குறைந்தளவு பணியாளர்களுடன் மக்களுக்கு திறம்பட சேவைகள் வழங்கப்பட்டது. 

இப்போது அதிகரித்த ஆளணி மற்றும் கணினி வளங்கள் இருந்தாலும் மக்களுக்கு சிறப்பான சேவைகள் வழங்கப்படவில்லை.

மக்கள் தமது பிரதேச அல்லது கீழ்நிலை அலுவலர்களின் ஊடாக ஒரு சேவையைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என மேல்நிலை அலுவலர்கள் அல்லது திணைக்களத் தலைவர்களிடம் சென்றால், அந்த மக்களுடன் எரிந்து விழுந்து அவ்வாறு ஏன் சென்றீர்கள் எனக் கேட்டு, அந்தச் தேவையை நிறைவேற்றிக்கொடுக்க மறுக்கின்ற கீழ்நிலை அலுவலர்கள் இப்போது இருக்கின்றார்கள்.

 இவர்களால் எப்படி இப்படிச் சொல்ல முடிகின்றது என இவர்களின் மனநிலையை நினைத்து கவலையடைகிறேன் என மேலும் தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலர் ம.பற்றிக்டிறஞ்சன், மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரன், நாட்டுக்கூத்து கலைஞர் கலாபூஷணம் செ.மாசிலாமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.   

இளங்கலைஞர் விருதை 10 பேரும், கலைக்குரிசில் விருதை 13 பேரும், சிறந்த நூல்களுக்கான விருதை 14 பேரும் பெற்றுக்கொண்டனர்







No comments