Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தென்மராட்சியில் வீதிகளிலும் சட்டவிரோத மண் அகழ்வு


யாழ்ப்பாணம்,  தென்மராட்சி - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு   இடம்பெற்றுள்ளமையை   கண்டித்து  

 பிரதேச மக்கள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை போரட்டத்தில் ஈடுபட்டனர்.

விடத்தற்பளை - கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதியிலேயே இந்த மண் அகழ்வு இடம் பெற்றுள்ளது.

குறித்த வீதி நெடுங்காலமாக மணல் வீதியாகவே இருந்து வந்துள்ளது. அப்பிரதேச விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்வதற்கு இந்த வீதியையே அதிகம் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், மண் அகழும் இயந்திரத்தின் உதவி கொண்டு  25க்கும் மேற்பட்ட டிப்பர் கன அளவு மண் அகழப்பட்டுள்ளதாக  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிற போதிலும் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.








No comments