Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மாவீரர்நாள் பதிவுகள் - பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழான கைது எண்ணிக்கை நான்காக உயர்வு


பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான தகவல்களை இணையத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டஅரசியல்வாதியும் பிரபல தொழில்முனைவோரும் சமூக ஊடக ஆர்வலருமான கெலும் ஜயசுமணவை எதிர்வரும்  04 ஆம் திகதி வரை விளக்கமறியலில்  வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பாக, உண்மைக்கு புறம்பான பிரசாரங்களை மேற்கொண்டு பொதுமக்கள் மத்தியில் அமைதியற்ற சூழலை ஏற்படுத்த முற்பட்ட குற்றச்சாட்டிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றம் விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நேற்று (01) அதிகாலை கைது செய்யப்பட்ட கெலும்ஜயசுமண , கொழும்பு கோட்டை கணினி குற்றப் பிரிவினரால், CCDI இல் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை அநுர அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவோம் என கூறி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் , மாவீரர் நாள் பதிவுகள் தொடர்பில் , பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சுன்னாகம் , மருதானை மற்றும் பத்தேகம ஆகிய பகுதிகளை சேர்ந்த மூவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , குறித்த நபர் நாலாவதாக கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

No comments