Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை - ஒருவர் கைது


யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு 60 லீட்டர் கோடா வுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அரியாலை பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று இயங்கி வருவதாக மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவ்விடத்தை சுற்றி வளைத்தனர். 

அவ்விடத்தில் இருந்து சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட காஸ் அடுப்பு, சிலிண்டர் , 60 லீட்டர் கோடா என்பவற்றை மீட்டதுடன் , உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அங்கிருந்த நபரையும் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபரையும் , மீட்கப்பட்ட பொருட்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

யாழ்ப்பாண பொலிஸார் சந்தேகநபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments