Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பண்டிகை காலத்தை முன்னிட்டு , யாழில் விசேட சோதனை நடவடிக்கைகள்


பண்டிகைக் காலத்தையொட்டி யாழ் மாவட்டத்தில் உணவு கையாளும் நிலையங்களின் சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்குடன் வடமாகாண சுகாதாரப் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

யாழ்ப்பாணம் நல்லூர், உடுவில் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இன்றைய தினம் திடீர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

இக் களப் பரிசோதனையில் சுகாதாரத்திணைக்களத்தை சேர்ந்த 9 குழுக்கள் ஈடுபட்டிருந்தன. 

இவர்களால் இன்றைய தினம் 76 உணவு கையாளும் நிலையங்கள் மேற்பார்வை செய்யப்பட்டன. இவற்றில் 28 உணவு கையாளும் நிலையங்களில் குறைபாடுகள் காணப்பட்டிருந்தன. 12 உணவு கையாளும் நிலையங்களுக்கு குறைபாடுகளை சீர்செய்யும்படி எழுத்துமூல அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

15 உணவு கையாளும் நிலையங்களில் தரமற்ற உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2 உணவு கையாளும் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. 

அதன் தொடர்ச்சியாக யாழ் மாவட்டத்திலுள்ள ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் இப்பரிசோதனை நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் - என்றுள்ளது.

No comments