உடுப்பிட்டி , இமையாணன் மேற்கில் புதிதாகத் திறக்கப்பட்ட மதுபானசாலையை அகற்றக்கோரி அப் பகுதியை சேர்ந்த 32 பொது அமைப்புக்கள் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ் வழக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் பொன்னுத்துரை கிருசாந்தன் முன்னிலையில், இன்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த மே மாதம் 5ம் திகதி தாக்கல் செய்யப்பட்ட இவ் வழக்கில் வழக்காளிகளாக பொது அமைப்புக்கள் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானார்.
விசாரணையின் போது மதுபானசாலை அமைத்ததற்கான தன் நிலையை குறித்த மதுபானசாலை உரிமையாளர் நீதிமன்றத்தில் விளக்கினார். உரிமையாளர் சார்பாக மற்றொரு சாட்சியம் அடுத்த தவணையின் போது அளிக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டது.
No comments