Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வல்வெட்டித்துறை பொலிஸ் தடுப்பு காவலில் ஒருவர் உயிரிழப்பு


யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த சந்திரகுமார் சந்திரபாலன் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார். 

குறித்த நபருக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் , நேற்று முன்தினம் சனிக்கிழமை வல்வெட்டித்துறை பொலிஸார் குறித்த நபரை கைது செய்து , பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் தடுத்து வைத்திருந்தனர். 

அந்நிலையில் திடீர் சுகவீனம் ஏற்பட்டதாக கூறி அவரை வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். 

தொடர்ந்து உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , வைத்திய சாலைக்கு நேரில் சென்று சடலத்தை பார்வையிட்ட , பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் , உடற்கூற்று பரிசோதனைக்காகசடலத்தை யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.

அந்நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைகள் நடைபெற்று , மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

No comments