தம்புள்ளை பகுதியில், வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்புள்ளை போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நடைபெற்ற சுற்றி வளைப்பின் போது, டைனமைட் 08 அங்குல நீளம் கொண்ட 05 ஜெல் காப்ஸ்யூல்கள், 04 சென்டிமீற்றர் நீளம் கொண்ட 10 டெட்டனேட்டர்கள் மற்றும் 500 கிராம் அமோனியா போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தம்புலுகம பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments