Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வொஷிங்டனுக்குச் சென்று எமது பிரச்சனைகளை எடுத்துக்கூறுவோம்


அமெரிக்க நிர்வாகம் எங்களை அழைத்தால், வொஷிங்டனுக்குச் சென்று, காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள், அரசியல் கைதிகள் மற்றும் நிலையான, பாதுகாக்கப்பட்ட, சுதந்திரமான, இறையாண்மையுள்ள தமிழர் தாயகத்தின் தேவை குறித்து விவாதித்து முடிவெடுக்கத் தயாராக உள்ளோம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார் தெரிவித்துள்ளார் 

வவுனியாவில் பிரதான தபாலகத்திற்கருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொங்கல் நாளான இன்று செவ்வாய்க்கிழமை  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

இந்த நாள் தை பொங்கல் 2025, நாங்கள் நம்பிக்கையை கொண்டாடுகிறோம். இந்த இனிய தருணத்தில் அனைவருக்கும் தைப் பொங்கல் நல்வாழ்த்துக்களை தாய்மார்கள் தெரிவித்துக் கொள்கிறார்கள். 

எவ்வாறாயினும், இந்த நாள் ஒரு சோகமான மைல்கல்லையும் குறிக்கிறது: தமிழ் தாய்மார்கள் தங்கள் காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகள் மீண்டும் பெறும்வரை    இடைவிடாத போராட்டத்தின் 2886 ஆம் நாள் இன்று. 

வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக ஏ-9 வீதியில் நிற்கும் இந்த தைரியமான தாய்மார்கள் சத்தியம் மற்றும் நீதிக்கான கோரிக்கையை தொடர்ந்தும்  முன்வைக்கின்றனர். 

தங்களின் அன்புக்குரியவர்களை வெளிக்கொணர்வதும், எதிர்கால இனப்படுகொலைகளைத் தடுப்பதும், தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச ஆதரவைப் பெறுவதும் தாய்மாரின்  நோக்கம்.

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை தமிழர்களாகிய நாம் வரவேற்கின்றோம். அவரது நிர்வாகம் எங்களை அழைத்தால், வொஷிங்டனுக்குச் சென்று, காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள், அரசியல் கைதிகள் மற்றும் நிலையான, பாதுகாக்கப்பட்ட, சுதந்திரமான, இறையாண்மையுள்ள தமிழர் தாயகத்தின் தேவை குறித்து விவாதித்து முடிவெடுக்கத் தயாராக உள்ளோம் என்றார். 




No comments