Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஆவரங்காலில் விபத்து - இரு இளைஞர்கள் படுகாயம்


யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அச்சுவேலி தெற்கை சேர்ந்த உதயகுமார் விதுஷன்(வயது 32), கரவெட்டியைச் சேர்ந்த தேவமனோகரன் பிரணவன் (வயது 23) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர். 

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் , யாழில் இருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிள் பயணித்த இளைஞன் , வீதியில் மாடுகளை கூட்டி (சாய்த்து) சென்ற இளைஞனுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார். 

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனும் , மாடுகளை சாய்த்து சென்ற இளைஞனும் படுகாயமடைந்த நிலையில், வீதியில் சென்றவர்கள் இருவரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் 

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


No comments