யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அச்சுவேலி தெற்கை சேர்ந்த உதயகுமார் விதுஷன்(வயது 32), கரவெட்டியைச் சேர்ந்த தேவமனோகரன் பிரணவன் (வயது 23) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் , யாழில் இருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிள் பயணித்த இளைஞன் , வீதியில் மாடுகளை கூட்டி (சாய்த்து) சென்ற இளைஞனுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனும் , மாடுகளை சாய்த்து சென்ற இளைஞனும் படுகாயமடைந்த நிலையில், வீதியில் சென்றவர்கள் இருவரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments