Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Saturday, May 17

Pages

Breaking News

தமிழக படகோட்டிகளுக்கு 09 மாத சிறைத்தண்டனையும் 40 இலட்ச ரூபாய் தண்டமும்




இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக படகோட்டிகளுக்கு 09 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் , 06 கடற்தொழிலாளர்க்ளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிரைத்தண்டனை விதிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளனர். 

இலங்கை கடற்பரப்பினுள் இரு படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த 08ஆம் திகதி 08 கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு , மறுநாள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் , விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர் 

அந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , 08 கடற்தொழிலாளிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். 

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து, படகோட்டிகள் இருவருக்கும் தலா 09 மாத சிறை தண்டனை விதித்த மன்று ,தலா 40 இலட்ச ரூபாய் தண்டமும் விதித்தது. ஏனைய 06 கடற்தொழிலாளிகளுக்கும் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.